விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.

The post விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: