மதுபானம் விற்ற பெண் கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் கள்ள சந்தையில் மதுபானம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கள்ள சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசார், சுந்தரம் 1வது தெரு, ரயில்வே டிராக் ஓரமாக சந்தேகத்தின்பேரில் ஒரு பெண்ணை பிடித்து அவரது கைப்பையை சோதனை செய்தனர்.

அப்போது அதில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் வியாசர்பாடி சுந்தரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த அமுதா (26) என்பதும், இவர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. கைதான அமுதாவிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மதுபானம் விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: