முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. புளூ கிராஸ் அமைப்புக்கு தமிழக அரசு நிலம் வழங்கியுள்ளதால் அரசே அதனை ஏற்று நடத்த வேண்டும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பெருமளவில் நிதி பெறுகிறது புளூ கிராஸ். எனவே, அதன் நிதி விவரங்களை வருமான வரித் துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித் துறை, புளூ கிராஸ் அமைப்பு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
The post புளூ கிராஸ் அமைப்பை அரசு ஏற்று நடத்தக்கோரி வழக்கு: விலங்குகள் நல வாரியம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.