சூளகிரி அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சூளகிரி, ஜூன் 19: சூளகிரி தாலுகா காளிங்காவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2009-2010ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு தேவையான நோட்டுப்புத்தகங்கள், பேனா, கிரிக்கெட் பால் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்களின் ஆசிரியர்களான ரேவதி, மஞ்சுளா, அன்பழகன், பாபு, கோவிந்தராஜ், ஜெயக்குமார், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

The post சூளகிரி அருகே அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: