கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்திப்பு..!!

கேரளா: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்துள்ளார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி சென்றடைந்தார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சற்றுநேரத்தில் கொச்சி கொண்டு வரப்பட உள்ளன. குவைத்தில் இருந்து 45 இந்தியர்களின் உடல்களுடன் கொச்சிக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் உடல்களை பெறுவதற்காக சென்ற அமைச்சர் மஸ்தான், கொச்சி விமான நிலையத்தில் கேரள முதல்வரை சந்தித்தார்.

The post கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: