மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி உட்கட்டமைப்பு, கல்வி சார்ந்த சேவைகள் மற்றும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கை, மாணவர் வருகை, பள்ளியில் இருந்து வெளியேறிய குழந்தைகள், ஹைடெக் லேப், தேர்வுகள், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம், விழுதுகள், வாசிப்பு இயக்கம் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆட்சியர் தலைமையில் எஸ்.பி., திட்ட இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வி பெறுவதையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்ய வேண்டும்.
The post பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம் இன்றி கற்பதை உறுதி செய்ய வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.