டூவீலர் விபத்தில் மனைவி கண்முன் கணவர் பலி

குஜிலியம்பாறை, ஜூன் 12: குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டை முத்தக்காபட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் (59). இவரது மனைவி முருகாயி (48). இவர்கள் தங்களது இரு பேரன்களுடன் டூவீலரில் பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து விட்டு, பின்னர் மீண்டும் முத்தக்காபட்டி நோக்கி சென்றனர். அப்போது கொடும்பு குளம் அருகே இரவு நேரத்தில் சென்ற போது டிராக்டர் டிரைலர் ஒன்று இணைப்பு துண்டாகி நடுரோட்டில் குறுக்காக நின்றிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக டூவீலர் மோதியதில் அதில் சென்ற நால்வரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் டிராக்டர் டிரைவர் கரூர் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் விபத்தில் மனைவி கண்முன் கணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: