ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வினா தாள் கசிவுகள், தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் என்பது தொடர் கதையாக உள்ளன. தேர்வு நடத்தும் அமைப்புக்கு பொறுப்புடைமை என்பதே இல்லையா. ஒன்றிய அரசும், நீட் தேர்வு முறையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இளம் மாணவர்களின் கனவுகள் இப்படி சிதைவதை ஏற்க முடியாது. மாணவர்களின் கடின உழைப்பை வீணடிக்கும் அநீதியை நிறுத்த வேண்டும். நீட் முறைகேடுகளை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை: அரசுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.