காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில், வங்க தேச பிரதமரை, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி,முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று பிற்பகல் சந்தித்து பேசினர். இரு தரப்பு உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஷேக் ஹசீனாவுடன் வந்துள்ள வங்க தேச உயர்மட்ட குழுவினரையும் சோனியா காந்தி சந்தித்து பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா குடும்பத்துக்கும், காந்தி குடும்பத்துக்கும் நீண்ட கால நட்புறவு உள்ளது.
The post வங்க தேச பிரதமர் ஹசீனாவுடன் சோனியா காந்தி சந்திப்பு: பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.