3வது முறை பிரதமரானதும் விவசாயிகளுக்காக மோடி தனது முதல் கையெழுத்திட்டார். நாடு முழுவதும் பிஎம் கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6,000 நிதி 3 கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 17வது தவணையாக விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதி வழங்குவதற்காக ரூ.20,000 கோடியை விடுவித்து மோடி கையெழுத்திட்டார். இதன் மூலம், 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
The post விவசாயிகளுக்காக ரூ.20,000 கோடி நிதி விடுவிப்பு: பிரதமராக பொறுப்பேற்றதும் மோடி முதல் கையெழுத்து appeared first on Dinakaran.