இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவுகள் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாதுக்கள் ஜம்முவில் குவிய தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு ஜம்முவின் பூரணி மண்டி பகுதியில் உள்ள ராம் மந்திர் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில் வளாகங்களில் விருந்து அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கும் இடத்திலேயே அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
The post அமர்நாத் புனித யாத்திரை 29ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.