வலிப்பு நோயால் ஓட்டல் தொழிலாளி சாவு

 

ஈரோடு, ஜூன் 8: ஈரோடு மாவட்டம், அறச்சலூர், வெள்ளிங்கிரிபுதூரைச் சேர்ந்தவர் சிவசாமி (48). மனைவி, மகன் உள்ளனர். அறச்சலூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிவசாமி வேலை பார்த்து வந்தார். கடந்த 3 வருடங்களாக சிவசாமிக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி மதியம் சிவசாமி ஓட்டலில் இருந்து வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதை கண்ட ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவசாமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வலிப்பு நோயால் ஓட்டல் தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: