அப்போது, நேற்று அதிகாலையில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரி மின் வாரியம் அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் வாசலில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது, லாரியில் இருந்த காலி பீர் பாட்டில்கள் நாளாபுறமும் சிதறி விழுந்தது. இதில், டிரைவர் பிச்சைமுத்து இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தார். இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த பிச்சைமுத்துவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர். மேலும், புகாரின் அடிப்படையில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நேற்று காலை போக்குவரத்து பாதிப்பும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
The post கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.