நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

 

நாகப்பட்டினம், மே 30: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. எஸ்பி ஹர்ஷ்சிங் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 17 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெறும் என கூறினார்.

The post நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: