ஆன்மிக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட மோடி, ஆன்மிக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம். இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மிக நோக்கம் கொண்டதல்ல. விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மோடி தியானம் மேற்கொள்ளும் 3 நாட்களும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மோடியின் தியான நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக புத்தி கொண்ட மோடிக்கு மனம் ஒன்றிய தியானம் என்றும் கிட்டாது appeared first on Dinakaran.