மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் மருத்துவமனையிடம் இந்த ஒரு சம்பவம் குறித்து விளக்கம் கேட்காமல் மருத்துவமனையின் பதிவு ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. எனவே, மருத்துவமனையின் பதிவை ரத்து செய்த அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார். மேலும் மருத்துவ வசதி என்பது கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் அதிக கட்டணம் வசூலிக்காத தனியார் மருத்துவமனைகளும் அவசியமாகிறது. இந்த மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
The post மருத்துவ வசதிகள் கார்ப்பரேட் மயமாகிவிட்ட நிலையிலும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் தேவையாக உள்ளன: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.