தொடர்ந்து மழையின் அளவு அதிகரித்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் பேரூராட்சி நிர்வாகம் அருவியில் கடந்த 19ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதை தொடர்ந்து தடையானது நேற்று வரை 8 நாட்களாக நீடித்த நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
மேலும் மழையின் அளவும் குறைந்து காணப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பகுதியிலிருந்தும் கோடை விடுமுறையை ஒட்டி வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் கடந்த 8 நாட்களாக கவலையோடு திரும்பி சென்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
The post 8 நாட்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.