அதை தொடர்ந்து விசாரணைக் குழுவானது நேற்று முன்தினம் கேடன்ஸ் மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் மருத்துவமனையில் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம்- 1997 சட்டத்தின் கீழ், உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உரிய அனுமயின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. மேற்காணும் மருத்துவமனை மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும், மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தும்) சட்டம், 1997 விதி 5(1)-ன் கீழ் பொது மக்களின் நலன் கருதி கேடன்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் செய்து ஆணையிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருகலைப்பு கோடம்பாக்கம் கேடன்ஸ் மருத்துவமனைக்கு சீல்: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அதிரடி appeared first on Dinakaran.