தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் அட்டை விநியோகம்

சென்னை: மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிதாக ரேஷன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேஷன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது.

The post தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் அட்டை விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: