சென்னை: கோவை முன்னாள் மேயரும், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். தா.மலரவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மலரவனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.