இதனையடுத்து புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் பிடிபட்ட நபரை செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் அயனாவரம் ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இம்ரான் உசேன் (31) என்பதும், இவர் கடந்த மாதம் 22ம் தேதி பெரம்பூர் நெல்வயல் ரோடு பகுதியில் ஜோதி சதன்யா (26) என்பவரது வாகனத்தை திருடிச் சென்றதும், இதில் ஜோதி சதன்யா செம்பியம் குற்ற பிரிவில் புகார் அளித்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இம்ரான் உசேன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் appeared first on Dinakaran.