பாலிவுட்டில் வெற்றி பெற்றுள்ளேன், அரசியலிலும் வெற்றி பெறுவேன்: கங்கனா ரனாவத்!

இமாச்சல பிரதேசம்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது.

இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில், இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபின் பேட்டி அளித்த நடிகையும், பா.ஜ., வேட்பாளர் கங்கனா ரனாவத் கூறுகையில், “இன்று நான் மண்டி லோக்சபா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மண்டியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். பாலிவுட்டில் வெற்றி பெற்றுள்ளேன், அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post பாலிவுட்டில் வெற்றி பெற்றுள்ளேன், அரசியலிலும் வெற்றி பெறுவேன்: கங்கனா ரனாவத்! appeared first on Dinakaran.

Related Stories: