காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ல் கூடுகிறது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ல் கூடுகிறது. டெல்லியில் மே 21-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. மே மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. முன்னதாக மே 16-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ல் கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: