கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மூவர் கைது

மேட்டூர், மே 14: மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி முனியப்பன் கோயிலில், நேற்று அதிகாலை உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, பள்ளிப்பட்டி காக்காயன் தெருவை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கோவிந்தராஜ் (17), செல்வம் மகன் பிரவீன் (23), பொருள்கோட்டையை சேர்ந்த பெருமாள் மகன் சக்திவேல் (27) ஆகியோர் உண்டியலை உடைத்து திருட முயற்சித்து கொண்டிருந்தனர். அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து மேச்சேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மூவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: