அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி

மதுரை, மே 12: மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆண்டார்கொட்டாராம் ஸ்ரேயா கார்டன் பகுதியில் வசிப்பவர் சோமசுந்தரம். இவரது நண்பர்கள் மற்றும் உறவினரான வைஜெயந்திமாலா உள்ளிட்ட பலருக்கு அரசு வேலை வாங்குவதற்காக கண்ணன் என்பவரிடம் ரூ.18.65 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி கண்ணன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது கண்ணன், அவரது மனைவி சித்ரா, அவரது உறவினர் பழனியப்பன் ஆகியோர் மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் கண்ணன், சித்ரா, பழனியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: