காவேரிப்பாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

*அதிகாரிகள் சமரசரம்

காவேரிப்பாக்கம் : சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குழாய்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று பனப்பாக்கம்- வாலாஜா நெடுஞ்சாலையில் சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் சீராக விநிேயாகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து கன்னிகாபுரம் அரக்கன் ஏரிக்கு வரும் கால்வாயை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தால் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது, எனவே கால்வாயை சீரமைத்து அரக்கன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவேரிப்பாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: