மாடு திருடிய 3 பேர் கைது: திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் துளசி (50). இவரது, மாடு கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல்போனது. இதை பல இடங்களில் தேடியபோது இள்ளலூர் வனப்பகுதியில் மாட்டை வெட்டி தலை மற்றும் உடல் பாகங்களை போட்டுவிட்டு இறைச்சியை எடுத்துச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து, துளசி திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த குகநாதன் (38), தயா (20), தட்சிணாமூர்த்தி (43) ஆகிய 3 பேரும், மாட்டை திருடி கொன்று இறைச்சியை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், தொடர்புடைய கார்த்திக் (32) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி appeared first on Dinakaran.