மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றியவர்கள் கைது

மதுரை, மே 7: மதுரை ஹீரா நகர் மேம்பாலத்தின் கீழ் திடீர் நகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் வாள் மற்றும் கத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த வட்ட காப்பு (19), கருப்பசாமி (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து வட்டகாப்பு, கருப்பசாமியை கைது செய்த போலீசார், சிறுவர்களை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இதேபோல் வைகை வடகரை தத்தனேரி அடுத்த அருள்தாஸ்புரத்தில், கத்தியுடன் சுற்றிய வடபழஞ்சியை சேர்ந்த சஞ்சய்கவுண்டர் (20) என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர். மூன்றுமாவடியில் வாளுடன் சுற்றிய காந்திபுரம், பாண்டியன் நகர் இரண்டாவது தெருவைசேர்ந்த கவட்டை சூர்யா (24) என்பவரை கே.புதூர் போலீசார் கைது செய்தனர்.

The post மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றியவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: