குமரியில் பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கன்னியாகுமரி; கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, சுபின் வர்கீஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். கோவையில் பொறியியல் படித்து வரும் இவர், விடுமுறைக்காக பூர்வீக கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post குமரியில் பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: