அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவி, விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.