போதைப்பொருள் தளமாகும் குஜராத்: அதிமுக மாஜி அமைச்சர் தாக்கு


மதுரை: இந்திய அளவில் போதைப்பொருள் பயன்பாட்டுத்தளமாக குஜராத் விளங்குகிறது என்றும், தமிழகத்தை ஒன்றிய அரச புறக்கணிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர்தெரிவித்தார். மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் முன்பு அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நீர், மோர் வழங்கும் நிகழ்வை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். இந்திய அளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத் இருக்கிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்” என்றார்.

The post போதைப்பொருள் தளமாகும் குஜராத்: அதிமுக மாஜி அமைச்சர் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: