கன்னியாகுமரி: கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, அருமனை, களியல், திற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.