கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

சூளகரி, மே 1: சூளகிரி அருகே ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா மகன் கோடிஸ்(20). டிப்ளமோ படித்து பாதியில் நின்றுவிட்டார். இந்த் நிலையில் இவரது நண்பர்களுடன் நேற்று மதியம் திராடி கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால், கோடிஸ் கிணற்றில் மூழ்கினார். அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதையடுத்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஓசூர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் மூழ்கிய கோடிசை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: