பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஊத்தங்கரை, மே 21: ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகள் திருமலா(17). இவர் கீழ்குப்பம் பள்ளியில் பிளஸ்2 படித்தார். தற்போது வெளியோன தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் திருமலா உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: