அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப் பள்ளியில் கடந்த 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் க.வேதாச்சலம். அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா மதுராந்தகத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் பணி நிறைவு பெற்ற தங்கள் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றனர். மேலும் அவர்களின் பெற்றோர் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

மற்றொரு விழா: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியராக சந்தோஷ் ராஜ்குமார் பணியாற்றி வந்தார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். அப்போது தலைமை ஆசிரியர் சந்தோஷ்ராஜ்குமாருக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து கூறினர். இதில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் சந்தோஷ் ராஜ்குமார் பேசியதைக் கேட்டு சக ஆசிரியர், ஆசிரியைகள் கண்ணீர் விட்டு அழுத காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: