தடுமாறிய ஹெலிகாப்டர்: தப்பினார் அமித்ஷா


பெகுசராய்: பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் தடுமாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்தார். பெகுசராய் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கலந்துகொண்டார். இதன்பின் ஹெலிகாப்டர் மூலமாக அவர் புறப்பட்டார். ஆனால், ஹெலிகாப்டர் புறப்படும் முன் கட்டுப்பாட்டை இழந்து சற்றே நிலை தடுமாறியது.

ஒரு கட்டத்தில் மேலே பறக்க முடியாமல், கீழே தரையை தொடும் அளவுக்கு சென்றதால் பதற்றம் நிலவியது. எனினும் சில விநாடிகளில் மீண்டும் வானத்தை நோக்கி பறந்து விபத்தில் இருந்து தப்பியது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்து அமித் ஷா உள்ளிட்டோர் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

The post தடுமாறிய ஹெலிகாப்டர்: தப்பினார் அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: