இந்நிலையில், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புறங்களில் சேனைக்கிழங்கு இந்தாண்டு சாகுபடி செய்தனர். ஆனால், போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு சேனைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதங்களில் ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ.25க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சேனைக்கிழங்கு கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
The post ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் சேனைக்கிழங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.