பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு மிரட்டல்: குஜராத் காங். தலைவர் குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், புனித திருவிழாவான தேர்தலை அச்சமோ, பாரபட்சமோ இல்லாமல் நடுநிலையாக நடத்த வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஆனால், பாஜவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அல்லது வாக்களிப்பதை தவிர்க்குமாறு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். இதுபோன்ற குற்றச்செயல்களை வாக்காளர்கள் செல்போனில் வீடியோவாக அல்லது ஆடியோவாக பதிவு செய்து கொள்ளுங்கள். சிசிடிவி காட்சிகள் அல்லது கேமரா பதிவுகள் இருந்தால் அந்த ஆதாரங்களை சேகரித்து கொடுக்கப்பட்டுள்ள (8200059989) என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்” என்றார்.

The post பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு மிரட்டல்: குஜராத் காங். தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: