இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை மற்றும் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், பெரும்பாக்கம், தண்ணீர்குளம், காக்களூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது, தண்ணீர் வடிந்துள்ள நிலையில், மீண்டும் நெடுஞ்சாலை பணிகள் துரிதவேகத்தில் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் இடங்களில் மட்டும் தூண்கள் அமைத்து, ‘கர்டர்’ இணைக்கும் பணி நடக்கிறது. மீதம் உள்ள பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 5 மாதங்களில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
The post ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’; திருவள்ளூர் – திருநின்றவூர் இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.