சென்னை: சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டனில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 31 சவரன் நகைகள் திருடி சென்றனர். பாதுகாப்பு கருதி சங்கீதா என்பவர் தனது தாயார் வீட்டில் நகைகளை வைத்திருந்த நிலையில் திருடுபோனது. 31 சவரன் நகை திருட்டு தொடர்பாக ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.