அப்போது செல்லமுத்து, ராமசாமி மற்றும் அவரது மனைவி மணிமேகலையை தாக்கி, மணிமேகலையின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சேந்தமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹரிஹரன் நேற்று மாலை, செல்லமுத்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்து கொள்ள ஒரு மாதம் கால அவகாசம் வழங்கினார்.
The post பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.