பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்

சண்டிகர்: முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் மொகிந்தர் சிங் கேபி நேற்று சிரோமணி அகாலிதளத்தில் இணைந்தார். மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் மொகிந்தர் சிங் கேபி. பஞ்சாப்பில் உள்ள டோப் பகுதியில் முக்கிய தலித் தலைவரான மொகிந்தர் சிங்,முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். அதே போல் எம்பி பதவியும் வகித்துள்ளார். இந்நிலையில், மொகிந்தர் சிங் நேற்று சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் மொகிந்தர் சிங் கேபி ஜலந்தர் தொகுதி அகாலி தள வேட்பாளராக சுக்பீர் சிங் பாதல் நேற்று அறிவித்தார். இதே போல் 2 தினங்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் எம்பி சந்தோக் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரி டெல்லியில் பாஜ தலைவர்கள் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.

The post பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: