இது குறித்து பிஸ்பி வேட்பாளர் அபித் அலி சத்யவீர் சிங்குக்கு போலி ஆவணங்களை தயாரிக்க உதவி செய்தது சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நீரஜ் மவுர்யா என காவல்துறையில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலி ஆவணம் தயாரிப்பு, மோசடி ஆகிய புகார்களின் அடிப்படையில் மவுர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். ஆனால் நீரஜ் மவுர்யா கூறுகையில்,‘‘ தொகுதியில் என்னுடைய செல்வாக்கு அதிகரித்துள்ளதால் கலக்கமடைந்த எதிர்க்கட்சியினர் என்மீது வழக்கு பதிந்துள்ளனர்.காவல்துறை விசாரணையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
The post பி.எஸ்.பி போட்டி வேட்பாளருக்கு போலி ஆவணம் தயாரித்த சமாஜ்வாடி வேட்பாளர் appeared first on Dinakaran.