கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நடந்த விபத்தை குற்றமாக கருதாமல் மாலுமிகளை விடுவிக்க ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கடந்த ஏப்.13ம் தேதி இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட எம்எஸ்சி அரைஸ் என்ற கப்பலை ஓமன் வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கைப்பற்றியுள்ளது. இதில் 18 இந்திய மாலுமிகளை பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானில் சிக்கியுள்ள 18 மாலுமிகளில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எனவே, இந்த இரு நாடுகளில் சிக்கியுள்ள மாலுமிகளை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து வைத்திருக்கும் இந்திய மாலுமிகளை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.