இந்த வருடம் 30 ஆயிரம் மாணவர் சேர்க்கையை இலக்காக வைத்துள்ளதாகவும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுக்குள், 50,000 மாணவர்களை இந்த படிப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம் ஆகியவை அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட பாட திட்டஙள். இவை வரும் காலங்களில் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். குறிப்பாக இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் திட்ட தலைவரான பேராசிரியர் அனிருத்தன் கூறுகையில், இந்த 4 ஆண்டு கால பாடத்திட்டம், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகள் போன்ற அன்றாட தொழில்நுட்பம் முதல் அதிநவீன மருத்துவம் வரை பலதரப்பட்ட சாதனங்களுக்கான மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் சோதிக்கவும் மாணவர்களை தயார்படுத்தும்.
மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் திறமையானவர்களாக இருப்பார்கள். படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் அனைவரும் தொழிலுக்குத் தயாராகும் வகையில் இந்தப் படிப்பை வடிவமைத்துள்ளோம். பொறியியல், வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் மின்னணு அமைப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.
The post சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: மே 26ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.