பின்னர் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் டுடேஜாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. விசாரணைக்கு பின் யஷ் டுடேஜாவை அமலாக்கத்துறை விடுவித்தது. சட்டீஸ்கர் தொழில் மற்றும் வர்த்தக துறை இணை செயலாளராக பதவி வகித்துள்ள அனில் டுடேஜா கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே பதிவு செய்த எப்ஐஆரை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இதையடுத்து பொருளாதார குற்ற பிரிவு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. பொருளாதார குற்ற பிரிவு புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.
The post ரூ.2 ஆயிரம் கோடி மதுபான ஊழல் சட்டீஸ்கர் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.