தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: நாட்டின் முன்னேற்றத்துக்கு உங்கள் பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய குடிமைப் பணியாளர்கள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: தேசிய குடிமைப் பணியார்கள் நாளில், தலைவர்களின் நோக்கத்துக்கு செயல்வடிவம் கொடுக்க அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்களது விலைமதிப்பற்ற பங்களிப்புகள் பாராட்டுக்குரியது. நாட்டின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது.

The post தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: