அதபற்றி பேச அவங்களுக்கு ரொம்ப பயம் நாட்டின் பிரச்னைகள் பற்றி மோடி பேசுவதில்லை: சரத் பவார் குற்றச்சாட்டு

ஜல்கான்: நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி மோடி பேசுவதில்லை என தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திரபவார்) தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டி உள்ளார். மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “முந்தைய தேர்தல்களில் அப்போதைய பிரதமர்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான தங்கள் தொலைநோக்கு திட்டங்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் இப்போதுள்ள பிரதமர் மோடி மாயஜால வார்த்தைகளை பேசி மக்களை மயக்க நினைக்கிறார். 10 ஆண்டு பாஜ அரசின் சாதனையை சொல்ல முடியாத அவர், எதிர்க்கட்சியான காங்கிரசை தாக்கி, அதன்மீது பழி சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார். சிலரை பற்றி தனிப்பட்ட தாக்குதல்களை செய்கிறார். நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன, நாடு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மோடி பேசுவதில்லை” என்று குற்றம்சாட்டினார்.

The post அதபற்றி பேச அவங்களுக்கு ரொம்ப பயம் நாட்டின் பிரச்னைகள் பற்றி மோடி பேசுவதில்லை: சரத் பவார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: