ரமேஷ் சொந்த வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இவர்களது காதல் திருமணத்திற்கு ரமேஷ், அவரது மனைவி சுமித்ரா ஏற்றுக்கொள்ளவில்லை.குடிப்பழக்கம் உள்ள முருகானந்தம் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரை அடித்து துன்புறுத்தியதுடன் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் முருகானந்தம் போதையில் வந்து பெற்றோரை துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த ரமேஷ், மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று முன்தினம் மாலை அரளி விதையை அரைத்து இருவரும் குடித்து விட்டனர். வீட்டில் மயங்கி கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார். மேலும் சுமித்ரா திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா உயிரிழந்தார்.
The post மகன் காதல் திருமணம் செய்த வேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.