சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையில் “காவல் கரங்கள்” உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று 9444717100 என்ற உதவி எண்ணில் (24X7) “மனிதம் போற்றுவோம்” மற்றும் “மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டு. சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று (18.06.2024) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப தலைமையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. காவல் ஆணையாளர் சிறப்புரையாற்றி கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு தேவையான மீட்பு உபகரணங்கள் வழங்கினார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவையை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தவும் மனஅழுத்தத்தை குறைக்கவும் வேண்டி அவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான T-Shirts (Jersey) வழங்கப்பட்டது.

இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 6,826 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4,788 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும். 1,059 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 737 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், அரசு மருத்துவமனைகளில் 242 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். உரிமை கோரப்படாத 3,674 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது. காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் 1,85,907 உணவுகள் நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் A.கயல்விழி, இ.கா.ப, (தலைமையிடம்), காவல் அதிகாரிகள், NGOs மற்றும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்.

The post சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் காவல் கரங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: